Pages

Thursday, May 19, 2011

வலிகளும் சுகங்களே.!


என்னை விட்டு பிரியாத
உந்தன் நினைவுகளால்
சில வலிகள் தரும் காயமும்
காயத்துக்கு நீ சொல்லும் ஆறுதல்
வார்த்தைகளும் தரும் சுகமே போதும்.
என் கண்களில் கண்ணீர் வேண்டம் என்று சொல்லும்
உன்னிடம் ஒரு அனுமதி வேண்டும் கண்ணே
என்றாவது ஒரு நாள் உன்னை பார்க்கும் பொது
ஒரு சில கண்ணீர் துளிகளை உதிர்த்து
அன்றும் உந்தன் அணைப்பில் மீண்டும் மலர்ந்து காதல் செய்வேன்.

Sunday, February 20, 2011

கண்ணீர்.!!


போதும்.!
ஏன் இந்தக் கண்ணீர்.!!
இன்றே முடியாத இந்த வாழ்க்கை.!!!

Thursday, February 17, 2011

உன் உதடுகள்..


உன் பார்வை பட்டு
என்னுள் பறந்த பட்டாம்பூச்சிகள்
இன்றோ அவை அனைத்தும்
பிரிந்து சேரும் உன் உதடுகளில் உட்கார துடிக்கின்றன..!

Friday, February 11, 2011

விடியும் வரை..


ஒளியை விழுங்கிய இரவு
உன் நினைவுகளை விழுங்கிய நான் விடியும்
வரை காத்திருப்போம் புதிதாய் ஒரு நாளுக்காக..!

உன் வரவுக்காய்...


இன்னும் உன் வரவுக்காய்
அதிகாலை சூரியனை அல்ல
என் மனம் திருடிய - ஜீவனே
உன் மலர்ந்த புன்னகைக்காய்..!

ஏன் இந்த உறக்கம்.

நீ உறங்கும் போது
உறங்காத என் விழி
விடியும் வரை உன்னை நோக்கி விழித்திருக்கும்.

Wednesday, February 9, 2011

இரத்தக்கறை.


காதல் கடிதத்தில் இரத்தக்கறை

கடிதத்தின் முடிவில்,

நீ இட்ட முத்தம்..x)