Pages

Saturday, November 13, 2010

தமிழின் இனிமையே.....



என் அன்னையின்
முதல் வருடல் -
பருவத்தில் முதல்
காதல் - முகில்
விலகையில் நிலவு -
முழங்கால் வரையில்
தண்ணிர் - கல்லூரியின்
முதல் அழுகை -
காணமல் போன
கடல் அலைகள் -
கண்ணில் விழுந்த
முதல் மழைத்துளி -
காதலியின் முதல்
முத்தம் - தொடர
ஏங்கிய கனவுகள் -
தொலைக்க
நினைத்த
நினைவுகள் -
என்றுமே
நம்முடன்
அதுபோல்தான் -
தமிழ்

Thursday, November 11, 2010

சார்லி சாப்ளின்!


உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால் அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள்! 1889-ல்…லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து விவாகரத்து அகிவிடவே, பேசத் தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாட வேண்டிய நிர்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக முடிதிருத்தும் நிலையம், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கோ வேலைபார்த்தவர் சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால் தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு! 1910ல்…நாடகக் குழுவினருடன் அமெரிக்கா சென்றவருக்கு குறும்படங்கலில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை நடிப்பான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘தி கிட்’ படத்தில் தொடங்கிய வரவேற்பு ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது. 1911-ல் நடந்த முதல் திருமணம் இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்கு பின் நடந்த இரண்டு திருமணங்களும் கூட சாப்ளினுக்கு சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1920-ல் நான்காவது மனைவியாக ஓ ரெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945-ம் ஆண்டு சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின். 1972-ல்… காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருதுபெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்று, “வாழ்நாள் முழுவதும் போர்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?” எனக் கேட்டார்கள். சாப்ளின் சிரித்தார், “இந்த நிலை மாறிவிடும்” என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை.

கப்பல்...

மழை
வரும்போது
குழந்தைகள்
காகித கப்பல்
விடுகிறார்கள்
பெரியவர்கள்
கப்பல் கவிழ்ந்த
சோகத்தில்
மிதக்கிறார்கள்....!

தந்தது இரவு....

கை நிறைய
மௌனத்தை அள்ளி
இரவின் முகத்தில்
வீசினேன்.
இருளை - ஒரு
கோப்பைத் தேநீராக்கி
பருகச் சொல்லித் தந்தது
இரவு.

மழையோடு ஒரு நேர்முகம்.....


எப்போதாவது மண்ணைத் தொடும் மழையோடு ஒரு நேர்முகம்: -

தாங்கள் எப்போதாவதுதான் மண்ணைத் தொடுகிறீர்கள், உண்மைதானே?
ஆம்! எனை வரவேற்க மரங்களில்லை என்ற கோபம்தான்!

உங்கள் பொழுதுபோக்கு?
சுகமாய் மேகக் கூட்டங்களோடு சுற்றித் திரிவது!

உங்களுக்குப் பிடித்த விளையாட்டு?
மாடிவீடோ குடிசைவீடோ பல்லாங்குழிதான் எனக்குப் பிடித்த விளையாட்டு!

உங்கள் சந்தோஷம் எப்பொழுது?
புதிதாய் மலர்ந்த மலரினைத் தழுவும்போது!

உங்கள் துக்கம்?
கூரை கலைந்த குடிசைக்குள் நுழையும் போது.

எப்போதும் வேலையோ?
இல்லை! இடையிடையே
இலைகளில் இளைப்பாறிவிட்டுத்தான்
பூமியையே தொடுகிறேன்!

சரி! மண்வாசம் பற்றி ஏதேனும் கூறுங்கள்!
அது மழைக்கான வரவேற்பு!
மணமகளாய் மண்ணைத் தொடும் மழைக்கு சிற்சில "பாக்டீரியாக்கள்" தெளிக்கும் பன்னீர்!

வானவில்?
அவன்
என்னைக்
காதலிப்பவன்!

அப்படியானால் பூமி?
எனக்கும் பூமிக்குமான
நிச்சயதார்த்தம் அவனுக்குத் தெரியாது.

பிறகு / வானவில்?
எனைக் கவரவே
வர்ணம் உடுத்துகிறான்
கரைத்துப் பார்க்கிறேன் முடியவில்லை.

அப்படியா?
ஆம்! நீங்கள் கவிதையில் மட்டுமே வானை வளைப்பீர்கள்!
அவன் எனக்காக தன்னையே வளைத்து நிற்கிறான்!

இடியைப் பற்றி?
அது மேகங்களுக்கிடையிலான பஞ்சாயத்து! / யார் முதலில்
துளியாய் மாறுவதென
மேகங்களுக்குள்ளான பஞ்சாயத்து!

மின்னல்?
பஞ்சாயத்திற்கான வான வேடிக்கை!

மொத்தத்தில் பூமி!
என் காதலன்
எனையூற்றிக் கொண்டு கவியெழுதும் கவிஞன்!

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை - எனில் யார் யார் அந்த நல்லார்?
இரவல் முகந்தொலைத்தவன்
சுயநலம் விற்றவன்
மனிதத்தை நேசிப்பவன்
இவர்களைக் கழித்தால்
இரு வகையுண்டு.
ஒருவகை குழந்தைகள்; மற்றொன்று மனவளர்ச்சியில்லாதவர்கள்!

ஏன் இவர்கள் மட்டும், நாங்கள்?
இவர்களில் இரவல் முகமில்லை!
உங்களில்?
இவர்களில் சுயநலத்தின் சாயலில்லை!
உங்களில்?

சரி! இறுதியாய் மனிதர்களான எங்களைப் பற்றி ஏதேனும் கூறுங்கள்?
மன்னிக்கவும்! கருத்துகூற விரும்பவில்லை.